Friday 23 December 2011

அடிசில்.7

பாகற்காய் வறை
                                     - நீரா -

தேவையானவை:
பாகற்காய்  - 400 கிராம்
தேங்காய்ப்பூ - ½ கப்
வெட்டிய வெங்காயம் - 1
செத்தல்மிளகாய் - 2
கறிவேற்பிலை கொஞ்சம்
கடுகு -  ½ தேக்கரண்டி 
சீரகம் - ½ தேக்கரண்டி 
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
எலுமிச்சம் சாறு - 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
செய்முறை:
1.  பாகற்காய்களை விதை நீக்கி மிகமெல்லிய அரைவட்டத் துண்டுகளாக வெட்டிக்கொள்க.
2.  அதற்குள் சிறிது நீர் விட்டு 1½ தேக்கரண்டி உப்புப்போட்டு அரை மணிநேரம் ஊறவிடுக. 
3.  ஊறிய பாகற்காயை நன்கு கழுவி நீர் போகப் பிழிந்து எடுக்கவும்.
4.  ஒரு பாத்திரத்தில் 1½ மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் பிழிந்த பாகற்காயை பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
5.  இன்னொரு பாத்திரத்தில் தேங்காய்ப்பூவை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
6.  அதே பாத்திரத்தில் மிகுதி ½ மேசைக்கரண்டி எண்ணெயை விட்டு சூடானதும் கடுகு, சீரகம், செத்தல்மிளகாய், கறிவேற்பிலை, வெங்காயம் போட்டுத் தாளிக்கவும்.
7.  அதற்குள் மிளகாய்த்தூள் சேர்த்து பொரியவிட்டு, பொரித்த பாகற்காய், வறுத்த தேங்காய்பூ போட்டு  கிளறி எடுக்கவும். 
8. ஆறியதும் எலுமிச்சம் சாறுவிட்டு பிசைந்து கொள்க. 

No comments:

Post a Comment