Sunday 25 December 2011

அமர்ந்திருக்கக் கற்றிலனே!


கத்தும் குயில் ஓசை எல்லாம்
              கந்தனவன் குரல் ஒலியே
மெத்த அதைக் கேட்டு நானும்
              மெய்மறந்து இருக்கையிலே
சித்தமதில் குடி இருக்கும்
              செம்மையினை உணர்ந்திங்கு
அத்தனவன் அருள் ஒளியில்
               அமர்ந்திருக்கக் கற்றிலனே!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment