பல்லவி
குன்றுதோர் ஆடிடும் குமரையா!
என்மனக் குன்றினில் ஆடிட வருவாயா!
- குன்றுதோர்
அனுபல்லவி
கன்று பசுவினைக் கதறி அழைப்பது போல்
என்றும் கதறுகிறேன் கேட்டிலையோ!
- குன்றுதோர்
சரணம்
தொன்று தொட்டுள்ள தொன்பொருள் என்றே
என் மனத்தே தேடித்தேடி கதறிடினும்
உன் அருளால் கூவிக்கூவி அழைத்திடினும்
புன்செவி கொண்டு பொய்யாய் இருப்பாயோ!
- குன்றுதோர்
குன்றுதோர் ஆடிடும் குமரையா!
என்மனக் குன்றினில் ஆடிட வருவாயா!
- குன்றுதோர்
அனுபல்லவி
கன்று பசுவினைக் கதறி அழைப்பது போல்
என்றும் கதறுகிறேன் கேட்டிலையோ!
- குன்றுதோர்
சரணம்
தொன்று தொட்டுள்ள தொன்பொருள் என்றே
என் மனத்தே தேடித்தேடி கதறிடினும்
உன் அருளால் கூவிக்கூவி அழைத்திடினும்
புன்செவி கொண்டு பொய்யாய் இருப்பாயோ!
- குன்றுதோர்
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment