Friday 30 December 2011

நினைக்க மனம் அழுவதென்ன? - 2


கந்தனே! கருணைப் பெருநிதியே! நீ
          தந்தைக்கு உபதேசம் செய்திடவே
சிந்தை நிறைந்தே சிவனும் கேட்டனனே!
           விந்தை மிகுந்த இவ்வுலகில்
மைந்தர் உரைப்பவை விருப்புடன்
          தந்தையர் கேட்பதுண்டோ?
தம்மில் தம்மக்கள் அறிவுடைமை மானிலத்து
          மன்னுயிர்க் கினிதென்று இயம்பியவுரை
                   நினைக்க மனம் அழுவதென்ன?
இனிதே,
தமிழரசி.

குறிப்பு:
இலண்டன் கவியரங்கொன்றில் சொன்னது.

No comments:

Post a Comment