Friday 2 December 2011

அடிசில்.4

சோயா மஞ்சூரி 
                                    - நீரா -

                                                                                     தேவையானவை:
சோயாத்துண்டுகள் -  300 கிராம்
சிறிதாகவெட்டிய குடமிளகாய் - 1
சிறிதாகவெட்டிய வெங்காயம் - 1
சிறிதாகவெட்டிய வெங்காயத்தார் - 1
இஞ்சி, பூண்டுவிழுது  -  2 தே.கரண்டி
சோயா சோஸ்  -  3 தேக்கரண்டி
மிளகாய் சோஸ்  -  2 தேக்கரண்டி
தக்காளி சோஸ்  -  2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள்  -  1 தேக்கரண்டி
வெள்ளை அரிசி மா - 3 தேக்கரண்டி
தண்ணீர்  -  1/4 கப்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் (பொரிப்பதற்கு)

செய்முறை:
1-  சோயாத் துண்டுகளை கொதிநீரில் 20 நிமிடம் ஊறவைத்து நீரில்லாது பிழிந்து எடுக்கவும்.
2-  பிழிந்தெடுத்த சோயாத்துண்டுகளூடன் உப்பு, மிளகாய்த்தூள், அரிசி மாவின் அரைவாசியையும் சேர்த்துப் பிசிரி அரைமணி நேரம் ஊறவிடவும்.
3-  ஊறிய சோயாத்துண்டுகளை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
4-  பொரித்த எண்ணெயில் சிறிதளவை இன்னொரு பாத்திரத்தில் விட்டு சூடாக்கி, வெங்காயத்தையும் குடமிளகாயையும் போட்டு வதக்கவும்.
5-  கொஞ்சம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து இஞ்சிமணம் வரும் போது அதனுள் பொறித்த சோயாத்துண்டுகளையும் வெட்டிய வெங்காயத்தாரையும் போட்டுப் பிரட்டவும்.
6-   அதனுள் மூன்று சோஸையும் சேர்த்து,  1/4கப் நீரில் மிகுதி அரிசிமாவை கரைத்து விட்டு சிறிது உப்பும் சேர்த்து இளஞ்சூட்டில் 2 நிமிடம் வேகவிட்டு இறக்கவும்.

No comments:

Post a Comment