Thursday 22 December 2011

நினைக்க மனம் அழுவதென்ன? - 1













மாஞ்சோலைக் குயில் இணைதேடிக் கூவுகையில்
பூஞ்சோலைதனிலிருந்து இணையாகக் கூவியதும்
தேஞ்சிந்தும் மலரின் மேல் தேன்குருவி ஊதுகையில்
துள்ளுமதன் சிறகடிப்பின் எழிலதனை இரசித்ததுவும்
கானகத்து கவினழகில் கருத்தழிந்து நிற்கையிலே
மான் இனந்துள்ள உடன்துள்ளி ஓடியதும்
தாமரை மலர்பறிக்க தடாகத்தில் நீந்தையிலே
தாவிமுதலை வரக்கண்டும் மலர்பறித்ததுவும்
நினைக்க மனம் அழுவதென்ன?
                                                                                                                     - சிட்டு எழுதும் சீட்டு (13)

No comments:

Post a Comment