Monday 14 November 2011

தமிழ் என்றன் தாய்


தமிழ் என்றன் தாய் ஆனதால்
          தாய் மடிமீது துயில் கொள்ளத்
தமிழ் நாடி நிதம் ஏங்குறேன்
          தாய் தந்த சுவைப்பாகு முத்
தமிழ் என்பதால் அச்சுவை தேடி
           தமிழ் கலை தோறும் நடமாடுறேன்
அமிழ்தான தமிழன்னை வளமூட்டுவாள்
          அவள் அடியொற்றி புகழ் கூட்டுவேன். 
                                                                         
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment