Tuesday 8 November 2011

இதயத்துள்ளாய்



சிலகால் நினைந்து உருகின்
            சிதறும் சிந்தை அதனால்
பலகால் நினைந்து அறியேன்
            பழவினைப்பட்டு அழிவேன்
ஒருகால் நினைந்து அருளாய்
            உலகம் யாவும் உடையாய்
இருதாள் நினைந்து நின்றேன்
            இதயத்துள்ளாய் என்றே
இனிதே,
தமிழரசி.

                                 

No comments:

Post a Comment