Sunday 13 November 2011

அடிசில்.1

முந்திரிப்பருப்பு போளி
                                  - நீரா -          

தேவையானவை:
உள்ளீட்டிற்கு வேண்டியவை:
முந்திரிப்பருப்பு  -  3/4 சுண்டு
சீனி/வெல்லம்   -  1/2 சுண்டு
தேங்காய்த்துருவல்  - 1/2 சுண்டு
எலக்காய்த் தூள்   -  1/2 தேக்கரண்டி
உப்பு    -  1 சிட்டிகை
மேல் மாவிற்கு வேண்டியவை:
கோதுமைமா  -  1 சுண்டு
மஞ்சள் தூள்  -  1/4 தேக்கரண்டி
உப்பு  -  தேவையானாளவு
நெய்  -   சிறிதளவு

செய்முறை:
1.  முந்திரிப்பருப்பை வெதுவெதுப்பான நீரில் 45 நிமிட நேரம் ஊறவிடவும்.
2.  ஒரு பாத்திரத்தில் மாவை இட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக்கலந்து நீர் தெளித்து நுனிவிரலால்    மென்மையாய் இளகியதாக நன்றாகப் பிசைந்து 1 மணிநேரம் மூடிவைகவும்.
3.  ஊறவைத்த முந்திரிப்பருப்பை நீரில்லாது வடித்து சீனி, தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து நன்கு அரைத்தெடுத்து ஏலப்பொடியும் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் நீர்த்தன்மை போகக்கிளறி உருண்டையாகப் பிடிக்கும் பதத்தில் இறக்கி ஆறவிடவும்.
4. பிசைந்து வைத்த மாவையும் உள்ளீட்டையும் சமமான  எண்ணிக்கையுள்ள  உருண்டைகளாக உருட்டிக்கொள்க.
5. மாவுருண்டையை கிண்ணம் போலச் செய்து அதனுள் உள்ளீட்டுருண்டையை வைத்து மாவை இழுத்து மூடி சிறிது மா தூவி உருளை போல் உருட்டிக்கொள்க.
6.  மா தூவிய பலகையில் ஒவ்வொரு உருளையா க இட்டு மிகமெல்லிய நீள்வட்ட போளிகளாகச் செய்து கொள்க.
7.   அந்த போளிகளை சிறிது நெய்விட்டு பொன்னிறமாகச் சுட்டு எடுக்கவும்.
குறிப்பு:
முந்திரிப்பருப்பு உடல் நலத்திற்கு நல்லதல்ல என நினைப்பவர்கள் The world's healthiest foods வலைத்தளத்துள் சென்று (cashews) பார்க்கவும்.  http://www.whfoods.com

No comments:

Post a Comment