Monday 7 November 2011

நங்கையும் வந்தனள்














மெல்லன மெல்லன முல்லை அரும்பிய
புன்னகை என்னை மயக்கிட

கொல்லன கொல்லும் கருவிழி ஊட்டிய
போதையில் என்மனம் சாய்ந்திட

சொல்லன சொல்லும் ஆசையில் ஊறிய
சேதியை நெஞ்சம் மீட்டிட

வெல்லன வெல்லும் ஆண்மையை வீழ்த்திய
வெற்றியை நானும் வாழ்த்திட

நில்லன நில்லன நினைவினை மீட்டிய
நந்கையும் வந்தனள் எனச்சேர்ந்திட.
                                      - சிட்டு எழுதும் சீட்டு (6)         

No comments:

Post a Comment