Thursday 30 January 2014

அடிசில் 77

பாதாம் பால்
- நீரா -

தேவையான பொருட்கள்:
பால்  - 3 கப்
பாதாம் பருப்பு - ½ கப்
பிஸ்தா பருப்பு - ¼ கப்
சீனி - ½ கப்
ஏலக்காய்  - 2
குங்குமப் பூ - 1 சிட்டிகை

செய்முறை: 
1. இரண்டு மூன்று பாதாம் பருப்பையும் பிஸ்தாப் பருப்பையும் வேறையாக எடுத்து வைக்கவும்.
2. மிகிதியாக உள்ள பாதாம் பருப்பு, பிஸ்தாப் பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவிட்டு தோலை உரித்து எடுக்கவும்.
3. தோலுரித்து எடுத்த பருப்போடு பாலைச் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
4. ஒரு பத்திரத்தை அடுப்பில் வைத்து அதனுள் அரைத்த பால் கலவையை விட்டு, சீனி சேர்த்து, அடிப்பிடியாதிருக்க இடைஇடையே கலக்கி இளஞ்சூட்டில் ஐந்து நிமிடம் சூடாக்கவும்.
5. பால் கொதிக்கும் போது ஏலக்காய்த்தூளையும் குங்குமப்பூவையும் போட்டுக் காச்சி எடுக்கவும்.

6. சூடாகவோ அல்லது ஆறிய பின்னர் குளிரவைத்தோ குடிக்கலாம்.

No comments:

Post a Comment