பாடசாலை போகவில்லை
பாடமும் படிக்கவில்லை
கூடமாட எவருமில்லை
கூத்தடிப்பு பார்ப்பாரில்லை
தேடவர யாருமில்லை
தேவையும் தோனவில்லை
நாடமாட கூடமில்லை
நாடினோம் நதியினெல்லை!
பாடிப்பாடி மரத்திலேறி
பாய்ந்து விளையாடுறோம்
ஆடியாடித் தொங்குமந்த
ஆசைக்கு ஈடுயில்லை
ஓடியாடிப் பதுங்கிநின்று
உல்லாசம் காணுகிறோம்
கூடிக்கூடி பலதும்கற்று
கூவுவோம் உலகினெல்லை!
இனிதே,
தமிழரசி.
பாடமும் படிக்கவில்லை
கூடமாட எவருமில்லை
கூத்தடிப்பு பார்ப்பாரில்லை
தேடவர யாருமில்லை
தேவையும் தோனவில்லை
நாடமாட கூடமில்லை
நாடினோம் நதியினெல்லை!
பாய்ந்து விளையாடுறோம்
ஆடியாடித் தொங்குமந்த
ஆசைக்கு ஈடுயில்லை
ஓடியாடிப் பதுங்கிநின்று
உல்லாசம் காணுகிறோம்
கூடிக்கூடி பலதும்கற்று
கூவுவோம் உலகினெல்லை!
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment