கிளிநொச்சி கந்தவேள் வணக்கப் பாமலர்
- இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் -
நிலநீண் டிடாயாழ் நகர்நீங்கி வந்தினிய
நீர்நீழு கிளிநொச்சியில்
நிலையாய் வதிந்தழகு நெல்லோடு பலசெல்வ
நிறைவோடு குடிவாழ்ந்துமே
குலநீண் டுயர்ந்தருட் குணநீண் டகன்றநற்
கூடல்வளர் தமிழ்வளர்ப்போம்
கூடாத கூட்டங்கள் குடிவகை கடிந்துளோம்
குலவுபல கலைவளர்ப்போம்
பொலநீண்ட வாலிபர்கள் நங்கையர் படிக்க
திட்டங்கள் செய்து
பாலோடு நெய்யுடன் தேனோடு செஞ்சோறு
பழமோடு வந்தளிப்போம்
தலநீண்டுயர்ந் தழகுபொலி சோலை கனியுதிர்
தரநீண்ட கோபுரமுயர்
தவமான நன்னகர்க் கிளிநொச்சி மகிழ்தரத்
தங்கியருள் கந்தவேளே!
No comments:
Post a Comment