Monday 6 January 2014

கலந்தாய் வாழி!


விரைமலர் ஏந்தி வந்து பணியாமுன்னம்
          விதிமுறை அற்று வந்து பணியாமுன்னம்
உரைபொருள் வாது செய்து ஒழியாமுன்னம்
          உறுகெழு பாவம் செய்து ஒழியாமுன்னம்
நரைதிரை மூப்பு வந்து நலியாமுன்னம்
          நமர்தமர் தூதர் வந்து நலியாமுன்னம்
கரைபொருது ஓடி வந்து கலக்கும்நீராய்
          கணநொடி தன்னுள் வந்து கலந்தாய்வாழி!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment