Monday 29 April 2013

அடிசில் 53

பால் அப்பம்

                              - நீரா -




















தேவையான பொருட்கள்:
குருணலான அரிசிமா [ground rice flour] - 1¾ கப்
பிரட் மிக்ஸ் [bread mix] - 1 கப்
சிவத்த அரிசிமா - ¼ கப் 
தடித்த தேங்காய்ப் பால்  -  3 கப் 
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
1. அரிசிமாக்களுடன் பிரட் மிக்சைக் கலந்து உப்பும் சேர்த்து தண்ணீர் விட்டு இறுக்கமில்லாது பிசைந்து வைக்கவும்.
2. பிசைந்த மாவை 5 - 6 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
3. புளித்த மாவிற்குள் அரைக் கப் தேங்காய்ப்பாலும் தண்ணீரும் விட்டு கரைத்துக் கொள்க.
4. மெல்லிய நெருப்பில் நொன் ஸ்டிக் அப்பச்சட்டியை சூடாக்கி குழிக்கரண்டியால் ஒரு கரண்டி கரைத்த மாவைவிட்டு, அப்பச்சட்டியைத் தூக்கி சரித்து வட்டமாக அப்பம் போல்வர சுற்றி, மீண்டும் அடுப்பில் வைக்கவும்.
5. அந்த மாவின் மேல் முக்கால் மேசைக்கரண்டி தேங்காய்ப் பால் விட்டு மூடியால் மூடி வேகவிடவும்
6. இரண்டு நிமிடங்களின் பின்பு அப்பம் வெந்திருப்பதைப் பார்த்து இறக்கவும்.

குறிப்பு:
தேங்காய் பால் பொடியை [coconut milk powder] தண்ணீர் விட்டு கரைத்து, தேங்காய்ப் பால் எடுத்தும் அப்பம் சுடலாம்.

No comments:

Post a Comment