Saturday 13 April 2013

வண்ணத்து பூச்சியே!













வண்ணமலர்கள் தேடித் தேடி
வட்டமிட்டு  வட்டமிட்டு பறக்கும்
வண்ணத்து பூச்சியே! உன்றன்
பட்டுச்சிறகை தொட்டுப் பார்க்க
எண்ணி சட்டென்று மெல்ல
எட்டிப் பிடித்த கையில்
வண்ணக் கலவை எங்கும் 
பட்டும் படாமலும் சிந்த
விண்ணில் பறந்த உன்னை
விட்டுவிட்டு அழுத என்நிலையை
எண்ணிச் சிரித்தேன், உனக்கு 
பட்டுப்பூச்சி என்று பட்டம்
வைத்தது யார் சொல்?
                                                       - சிட்டு எழுதும் சீட்டு 57

No comments:

Post a Comment