Saturday 6 April 2013

அடிசில் 51

நீற்றுப்பூசனிக்காய் அல்வா

                                                           - நீரா -















தேவையான பொருட்கள்:
நீற்றுப் பூசனிக்காய்  -  3கப்
சீனி  -  1 ¼ கப் 
நெய்  -  1 மேசைக் கரண்டி 
முந்திரிப்பருப்பு  -  10
குங்குமப்பூ/கேசரிப்பவுடர்  - 1 சிட்டிகை
ஏலப்பொடி  -  1 சிட்டிகை

செய்முறை:
1 . நீற்றுப்பூசனிக்காயை தோல் சீவி, விதைகளை நீக்கி துருவியால் துருவிக் கொள்க.
2.  வாயகன்ற பாத்திரத்தை அடுப்பேற்றி நெய்யைச் சூடாக்கி உடைத்த முந்திரிப்பருப்பை பொன் நிறமாகப் பொரித்தெடுக்கவும்.
3. அதில் துருவிய நீற்றுப்பூசனிக்காயைப் போட்டு நீர் அற்றுப்போகும் வரை வதக்கவும்.
4. வதங்கிய நீற்றுப்பூசனிக்காயுடன் சீனியைச் சேர்த்துக் கிளரவும்.
5. நெய் பிரிந்து வரும் போது பொரித்த முந்திரிப்பருப்பு, குங்குமப்பூ, ஏலப்பொடி மூன்றையும் சேர்த்து கிளறி, அல்வா கரண்டியுடன் சேர்ந்து வரும் பொழுது இறக்கவும்.

No comments:

Post a Comment