Saturday 27 April 2013

கிளிநொச்சி மருவும் கோயில் மகிழ்ந்தருளே!

கிளிநொச்சி கந்தவேள் வணக்கப் பாமலர்

                                      - இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன்











பழமுதிர் சோலைக் கள்ளழகர் பண்பில்
          வளர்ந்த வள்ளிமலர்
பரவப் பரிந்து பரங்குன்றப் பதியைநீக்கி
          யுவந்து வந்து
கிளமுதி ரிளமை வேட்டுருவங் கிளரத்
          தாங்கி மரமாகிச்
கீதம்பாடும் நாரதரின் கேலிக் கிரங்கி
          அலந்து நொந்து
மழமுதிர் களிறா வரும்வண்ணம் வனத்தே
          தமையன் றனையழைத்து
மன்னன் நம்பிமகள் மணத்தை மருவி
          மகிழ்ந்த மணவாளா!
வளமுதிர் நன்னீ ரிரணைமடு வாய்க்கால்
          வழிந்தே நெல்விளையும்
வளஞ்சூழ் நகரக் கிளிநொச்சி மருவும்
          கோயில் மகிழ்ந்தருளே!

No comments:

Post a Comment