Monday 22 April 2013

ஆசைக்கவிதைகள் - 61

ஓட்டைச் சங்கானேன்!

























குதிரைமலைக் கடற்கரையில் சங்குகளை அடுக்கி சிறுயது முதல்இளஞ்சிட்டுக்களாய் விளையாடித் திரிந்த மச்சானும் மச்சாளும், பருவவயதுவர ஒருவரைவிட்டு ஒருவர் மெல்ல விலகினர். மச்சானுக்கோ மச்சாளின் நினைவு மாறாது என்றும் பசுமையாய் இருந்தது. அறியாப்பருவத்தில் அவள் சொன்னவற்றை அவன் உறுதியாக நம்பினான். கடற்கரையில் சங்குகளைப் பார்க்கும் போதெல்லாம் அவளின் நினைவால் அவன் துவண்டு பாதிச்சங்கு போல மெலிந்து போனான். எதற்கும் உதவாத ஓட்டைச் சங்குபோன்ற நிலையில் அவன் வாழ்க்கை நகர்ந்தது. மச்சாள் மேல் காதல் கொண்டதால் தானிருக்கும் நிலையை எண்ணி சங்குகளோடு ஒப்பிட்டு வருந்துவதோடு, மச்சாளை தன்னை ஏமாற்றிய துரோகியாக எண்ணி பாடுகிறான். அவள் ஏமாற்றினாளோ இல்லையோ காதலனின் மனஓட்டத்தை இந்த நாட்டுப்பாடல்கள் நன்கு எடுத்துச்சொல்கின்றன.

மச்சான்: ஓட்டைச் சங்கானேன்
                          உடைந்த சங்கு நீருனேன்
               பாதிச்சங்கானேன் மச்சியுன்மேல்
                           பட்சம்வைத்த நாள் முதலாய்.

மச்சான்: உன் சொல்லில் உறுதி கொண்டேன்
                          உன் பேச்சில் மையல் கொண்டேன்
               உன்னைப் போல் நீலி
                          உலகத்தில் கண்டதில்லை.
                                                          -  நாட்டுப்பாடல் (குதிரைமலை)
                                                            பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

No comments:

Post a Comment