Tuesday 2 April 2013

கொள்ளை இன்பம் காண்போம்.











தீதும் நன்றும் தீண்டாது
சூதும் வாதும் அறியாது
துள்ளித் திரியும் சிறுபருவம்
அள்ளித் தெளித்த அன்பில்
தினம் ஆடிக் களிக்கும்
மனம் கூடிக் குலவ
நுள்ளுபிராந்து கிள்ளுபிராந்து
சொல்லி விளையாடும் சிறுவர் 
வெள்ளைச் சிரிப்பில் நாம்
கொள்ளை இன்பம் காண்போம்.
                                                             - சிட்டு எழுதும் சீட்டு 56

No comments:

Post a Comment