Tuesday 5 November 2013

ஆனந்தமான முருகா!




கிளிநொச்சி கந்தவேள் வணக்கப் பாமலர்
                                        - இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் -

















ஓராத பேர்வாழ உத்தமர் மனம்நோவ
          உவத்தல் நின்னியல்பு தானோ
ஒருமாவின் வடிவான முதுசூ ரழித்தவா
          ஓங்கார ஒளி ரூபனே
பாராத பார்வையை என்மீது வைப்பதோ
          பாவி மீதருளி ல்லையோ
பிரமனைச் சிறையிட்டு உலகம் படைத்தருள்
          பன்னிரு விழிக் கருணையே
ஆராதனை செய்தயர்ந்தே னலால் நின்
          அடியிணை பிடிக் கிலேனே
அண்டங் கடந்தபர வெளியாகி ஒளியாகி
          ஆனந்த மான முருகா
தீராத வினையெலாந் தீர்த்தருளி நிறைசெல்வம்
           சித்திக்க அருள் ஈகுவாய்
திருமருவு கிளிநொச்சி சேர்கந்த கோட்டத்து
           இருந்தருளு கந்த வேளே!

No comments:

Post a Comment