Wednesday 20 November 2013

நெஞ்சம் மறந்ததில்லை

1983 இனக்கலவரம் - பொரளை

நெஞ்சம் மறந்ததில்லை - அது 
          நினைவை இழந்ததில்லை
தஞ்சம் கேட்கவில்லை - எம்
          தாய்மண் கேட்டுநின்றோம்!

துஞ்சும் புன்னுடலை - சற்று
          துணியற்றே உருவி
வஞ்சம் ஏதுகொண்டு - அன்று
          வதைத்து மகிழ்ந்தீரோ!

விஞ்சை மிகுஉலகில் - உடன்
          வீழ்ந்து எழும்பயிராய்
கொஞ்சும் தமிழ்க்கன்னி - தன்
          கோல் ஓச்சிடஎழுவாள்! 
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment