Wednesday 27 November 2013

செஞ்சுடர் வீசி மிளிர்கிறதே!



















இந்து சமுத்திர நித்திலமாய்
          இலங்கிய நல் தீவெதுவோ!
முந்து சமயநெறி கண்டார்
          முழுதுணர்ந்த தீவெதுவோ!

சந்தங் கமழு தமிழ்ப்பாடல்
         சங்கம் கண்ட தீவெதுவோ!
உந்த மானிட நாகரீகம்
         உலகுக்கு ஈந்த தீவெதுவோ!

இந்திய புத்தன் போதனையை
          இடற வைக்கும் தீவதுவே!
சிந்திய இரத்தம் போதாதென்று 
          சாடி யடக்கும் தீவதுவே!

அந்திய கிரியை செய்வதையும்
          அடக்கி ஒடுக்கும் தீவதுவே!
முந்தியே இறந்தோர் கல்லறையை
          முட்டி உடைக்கும் தீவதுவே!        
          
உந்தீ கிழித்து கருவெடுத்து
          உயிர் கருக்கி உருக்கிடினும்!
நந்தீந் தமிழை மறப்போமா
          நயந்தே பாரீர் நம்தீவை!!

உந்து சமுத்திர அலையிடையே
          ஓங்கொளி வீசி மிளிர்கிறதே!!
செந்தமிழ் தாயின் தீவதுவாய்
          செஞ்சுடர் வீசி மிளிர்கிறதே!!   

No comments:

Post a Comment