Sunday 29 July 2012

ஆறுமோ! இந்த வடு!

















தீருமோ! நெஞ்சக் குமுறல்!
தெருவிற் கிடந்து புரண்டு
பாராய்! என் செல்வமென்றே
பாவிபடு துயரணைத்தும் 
நேராய் சென்று தாக்காதோ!
நைந்து அழ மாட்டாமல்
ஊராரும் திகைத்தனரே!
உருக்குலைந்த பண்டமாய்
போராரின் பிண்டமாய்
போயொழிந்த வாழ்வுதனை
வாரி அணைத்தழுவதற்கு 
வடியாத கண்ணீரை
சீராய் எடுத்தே நல்
செங்குருதிச் சேர்த்து
நீராய் பருகிடுவீர்!
நீள் நிலத்தீர்!
நீரும் நிலமும் காற்றும் வானும் 
நெருப்பாய் கனன்று எரியினும்
ஆறுமோ! இந்த வடு!
கூறுமோ நல் உலகு!
                     - சிட்டு எழுதும் சீட்டு 37

No comments:

Post a Comment