Thursday 19 July 2012

சகதியிலாடி சலிப்பதும் ஏனோ!



கட்டங்கள் கட்டி தாயங்கள் போட்டு
          களித்தே இருந்த கற்பனை மாந்தர்
பட்டங்கள் என்றும் பதவிகள் என்றும்
          பதறியே ஓடி பதைப்பதும் ஏனோ!
வட்டங்கள் போட்டு வானத்தில் பாய்ந்து
          விரைந்தே குண்டுகள் வீழ்த்திடு மாந்தர் 
நட்டங்கள் என்றும் நாசங்கள் என்றும்
          நிலையினைக் கூறி நடிப்பதும் ஏனோ!
திட்டங்கள் தீட்டி தேசங்கள் ஆண்டு
          தலைத்தே இருந்த தென்தமிழ் மாந்தர்
சட்டங்கள் என்றும் சாத்திரம் என்றும்
          சகதியில் ஆடி சலிப்பதும் ஏனோ!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment