Wednesday 18 July 2012

தோல் அழகு 4


எண்ணெய்த் தன்மையும் வறண்ட தன்மையும் சேர்ந்த தோல்

பொதுவாக இத்தன்மையுடைய தோல் உள்ளவர்களுக்கு நெற்றியிலும் மூக்கிலும் எண்ணெய்த் தன்மை கூடுதலாக இருக்கும். முகத்தில் மோவாய், கண், கன்னம் ஆகிய இடங்கள் வறண்டு காணப்படும். இத்தகைய தோலுள்ள பெரும்பாலான பெண்களுக்கு மூக்கைச் சுற்றி அதிக பருக்களும் கன்னத்து தோல் வறண்டு உரிந்தும் இருக்கும். வரட்சியால் உரிந்து வரும் தோல், எண்ணெய்த் தன்மையான தோலுள்ள பகுதியில் ஒட்டிக்கொள்ளும். அது தோலின் நுண்துளைகளை அடைக்கும். அதைப் போக்க ஒரு தேக்கரண்டி ஓட்மீல் (oatmeal) உடன் ஒன்றரைத் தேக்கரண்டி ரோஸ் வோட்டர் அல்லது தண்ணீர் சேர்த்து கலந்து முகத்தை தேய்த்து கழுவலாம். மிகவும் கரகரப்பான பொருட்களால் எண்ணெய்த் தன்மையான தோலுள்ள பகுதியை தேய்ப்பதைத் தவிர்க்கவும். 

Photo Courtesy: inspiredbysavannah.com
முகத்தில் இருவிதமான தோலும் இருப்பதால் முகம் முழுவதற்கும் ஒரே பொருளைப் பயன்படுத்துவது நல்லதல்ல. இப்படியான தோல்  உள்ளவர்கள் முகத்திற்கு போடும் கிறீம்களை கவனமாகப் பார்த்து எடுத்து பயன்படுத்த வேண்டும். எண்ணெய்த் தன்மையான தோல் உள்ளவர்கள் முகம் கழுவப் பயன்படுத்துபவைகளையோ (harsh cleansers), வறண்ட தோல் உள்ளவர்கள் முகம் கழுவப் பயன்படுத்துபவைகளையோ (milky cleansers) தவிர்த்து, ஈரத்தன்மையான (moisturizing cleansing bar) சோப் பாவிக்கவும். எண்ணெய்த் தன்மையான பகுதியை ஒவ்வொரு நாளும் இருமுறை கழுவவேண்டும். எத்தன்மையான தோலுக்கும் ரோசாப்பூ, மாம்பழம் போன்றவை உகந்தவை ஆதலால் அவைசேர்ந்த பொருட்களைப் பாவிப்பது நல்லது.

கொதிக்கவைத்த நீரை வாயகன்ற பாத்திரத்தில் விட்டு, அதனுள் ஒருத ேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து, துவாயால் தலையை மூடி நீராவியில் ஐந்து நிமிடம் முகத்திற்கு வேட்டு பிடிக்கவும். நீராவி கன்னத்தில் உள்ள வறண்ட தோலை மென்மையாக்குவதுடன், நெற்றியிலும் மூக்குப்பகுதியிலுமுள்ள எண்ணெய்த் தன்மையையும் போக்கும். இப்படி கிழமைக்கு ஒருமுறையாவது செய்வது நல்லது.

முகப்பற்று - எண்ணெய்த் தன்மையும் வறண்ட தன்மையும் சேர்ந்த தோல் உள்ளவர்களுக்கு:

1 புதிதாக மலர்ந்த ரோசப்பூ
1 கப் தண்ணீர்
1 தேக்கரண்டி ரோஸ்வாட்டர்
1 தேக்கரண்டி தேன்
1 தேக்கரண்டி கட்டித் தயிர்

ரோசாப்பூ இதழ்களை தனித்தனியாக எடுத்து 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து வடித்து எடுக்கவும். அந்த ரோசாப்பூ இதழ்களுடன் ரோஸ்வட்டர், தேன், தயிர் சேர்த்து அரைத்து முகத்தில் பற்றுப் போட்டு ஆறு ஏழு நிமிடத்தின் பின்னர் கழுவவும். 

No comments:

Post a Comment