Thursday 12 July 2012

ஆசைக்கவிதைகள் - 37


வந்துதித்த வைரமுத்தே!




















ஆராரோ ஆரிவரோ! 
          ஆராரோ ஆரிவரோ!
முத்தான முத்தே
           முதுகடலில் மூத்தமுத்தே!
 முத்த பாற்கடலில் 
            முன்எழுந்த பச்சமுத்தே!
ஏத்தி எழுங்கடலில்
           இப்பியீன்ற இன்பமுத்தே!
சால பெருங்கடலில்
          சங்கீன்ற சாதிமுத்தே! 
ஆழ பெருங்கடலில்
           ஆடுகிற ஆணிமுத்தே!
வாழ பெருங்கடலில்
           வந்துதித்த வைரமுத்தே!
கண்தூங்கு கண்தூங்கு!
           கண்ணே! நீ! கண்தூங்கு!
                                         -  நாட்டுப்பாடல் (மன்னார்)
                                         (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

No comments:

Post a Comment