Tuesday 17 July 2012

அடிசில் 30

வாழைப்பூ வடை

                                                  - நீரா -




















தேவையான பொருட்கள்:
வாழைப்பூ  -  1
கடலைப்பருப்பு  -  1 கப்
வெட்டிய வெங்காயம்  -  1
வெட்டிய பச்சை மிளகாய்  -  4/5
செத்தல் மிளகாய்ப் பொடி  -  2 தேக்கரண்டி 
மிளகு  -  1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம்  -  1 தேக்கரண்டி
வெட்டிய கறிவேப்பிலை  -  கொஞ்சம்
உப்பு  -  தேவையான அளவு
எண்ணெய்  -  பொரிப்பதற்கு 
செய்முறை:
1.   கடலைபருப்பை 20 நிமிடம் ஊறவைத்து வடித்தெடுக்கவும்.
2.  அதனுடன் மிளகு, பெருஞ்சீரகம், உப்பும் சேர்த்து சொர சொரப்பாக ஆனால் உதிர்ந்து போகாதபடி அரைத்துக் கொள்க.
3.  வாழைப்பூவில் வாடியிருக்கும் வெளியிதழ்களை நீக்கி, உள்ளே இருக்கும் வெளிர் மஞ்சட் சிவப்பான  பொத்தியை பொடியாக வெட்டி, சிறிது உப்பு சேர்ந்த நீரில் போட்டு கழுவி பிழிந்து எடுக்கவும்.
4.  அதில் அரைத்த கடலைப் பருப்பையும் செத்தல் மிளகாய்ப் பொடி,  வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து குழைத்துக் கொள்க. 
5.  அதனை சிறிய உருண்டைகளாகப் பிடித்து வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

No comments:

Post a Comment