Saturday 17 March 2012

வள்ளிமணாளன்


எனக்கு இனியனாய் என்னுள் இருந்து
எனக்கு அருள என்னை நினைந்தே
தனக்கு என்னைத் தாயாகக் கொண்டவன்
வனக்குற வள்ளிக்கு வாய்த்த மணாளனே.
தேனாய் இன்னமுதாய் தித்திக்கும் தீங்கரும்பாய்
தானாய் வந்து என் உளம் புகுந்து ஊஉறி
ஊனாயுருகி என்னையே உருக்கி உவக்கின்றான்
மானாய் நோக்கி வள்ளிமணாளன் வந்திங்கே.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment