Thursday 29 March 2012

அடிசில் 19


தக்காளி ஊறுகாய் 
                              - நீரா -












தேவையான பொருட்கள்:
தக்காளி  -  300 கிராம்
இஞ்சி  -  1” துண்டு 
உள்ளிப் பல்  -   10 
செத்தல் மிளகாய்  -  10
கரைத்த புளி  -  1 மேசைக்கரண்டி 
மஞ்சள் தூள்  -   1/4 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்  -   1/4 தேக்கரண்டி
வெந்தயம்  -   1/4 தேக்கரண்டி
கடுகு  -  1/4 தேக்கரண்டி
எண்ணெய்  -  1 மேசைக்கரண்டி 
உப்பு  -  தேவையான அளவு 
செய்முறை:
1.  தக்காளியைக் கழுவி சிறுதுண்டுகளாக வெட்டிக் கொள்க.
2.  இஞ்சி, உள்ளிப்பல், செத்தல் மிளகாய் மூன்றையும் கரைத்த புளிவிட்டு நறுவல் துருவலாக அரைத்துக் கொள்க.
3.  வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்து தூளாக்கிக் கொள்க.
4.  வாயகன்ற பாத்திரத்தைச் சூடேற்றி எண்ணெய் விட்டு கடுகை தாளிக்கவும்.
5.  கடுகு வெடித்ததும் வெட்டிய தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் இட்டு பொரியவிடவும்.
6.  அதனுள் அரைத்த விழுதை சேர்த்து மிகக் குறைந்த சூட்டில் வேகவிட்டு எண்ணெய் பிரிந்து வரும்பொழுது வெந்தயத்தூளைப் போட்டு கிளறி இறக்கவும்.
7.   நன்றாக ஆறியதும் நீர்த்தன்மை அற்ற போத்தலில் இட்டு காற்றுப் போகாது மூடிவைத்து பரிமாறவும்.

No comments:

Post a Comment