Saturday 3 March 2012

பாட்டுப் பாடும் பறவை



பாட்டுப் பாடும் பறவை எல்லாம்
         பறந்து பறந்து வந்தே
கூட்டம் போட்டு குழந்தை உன்னை
         குலவி என்றும் காத்திடும்
வாட்டம் உற்று மர நிழலில்
         வாடி நீயும் இருந்திட்டால்
ஆட்டம் ஆடி வண்ண மயிலும் 
         அகம் குளிர வைக்குமே.
                                - சிட்டு எழுதும் சீட்டு - 23
                                         (1985ல் மகனுக்கு எழுதியது)

No comments:

Post a Comment