Friday 30 March 2012

இதழாய் மலர்ந்தேன்


பசுந்துளிராய் முகிழ்ந்தே - மெல்ல
பசுந்தளிராய் அவிழ்ந்தே
இளந்தளிராய் விரிந்தே- மெல்ல
இளமிலையாய் அசைந்தே
முதிரிலையாய் அலைந்தே - மெல்ல
பழமிலையாய் வீழ்ந்தே
சருகாய் சாய்ந்து கிடந்தேன் - எனினும்
பெண்ணே! உன் இதழாய் மலர்ந்தேன்
கலைஞனின் எண்ணக் கருவினில்.
                                                                       - சிட்டு எழுதும் சீட்டு - 26

No comments:

Post a Comment