Wednesday 21 March 2012

தவிக்கின்றேன் தலை வணங்கி



ஆபுத்திரன் கதை கேட்டேன் அன்று.
நாய்புத்திரன் நிலை கண்டேன் இன்று.
‘நாயிற் கடைப்பட்ட நாயேன்’ என மணிவாசகன்
நவின்ற உரை நான் உணரக்காட்டிய நாயாம் தாயே!
நானிலத்து வாழும் மானுடரும் அறியா
‘நன்றியுள்ள மிருகம் நாய்’ எனும்
நற்றமிழ் வாக்கு நிலைத்திட,
ஊண் உருகி ஊன் உருகி
உருக்குலையும் பாலனுக்கு,
தாயென நீ சுரந்த பாலமுதம்
நாயென இகழ்வார் தமை
நாணமுறச் செய்யாதோ!
நாயாகித் தாயாகி நிற்கும்
நின் செயல் கண்டு
தாயெனச் சொல்லும் தரமற்று
தவிக்கின்றேன் தலை வணங்கி.
                                                - சிட்டு எழுதும் சீட்டு - 25

No comments:

Post a Comment