Sunday 22 January 2012

தியாகிகள்


கோடி கோடியாய் பிறந்த
           தமிழர் இங்கு ஒரு
                    நாடுமின்றி வாழ்கிறாரெடா

கோடி கோடியாய் பிறந்த
          அவரில் யார் தான்
                  நிலைத்து நிற்கிறாரெடா

தாய் மண் வாழ்கவென்று
          தன்னுயிர் ஈந்த தியாகிகள்
                   திலகமெனத் திகழ்கிறாரெடா

அவரே தமிழீழ மண்ணின்
          சரித்திரப் பொன்னெழுத்தில்
                     நிலைத்து நிற்கிறாரெடா.
                                                           - சிட்டு எழுதும் சீட்டு (18)

No comments:

Post a Comment