Thursday 5 January 2012

பெருங்கருணை நீ புரியாயோ!

காணுமிடமெல்லாம் நீ நிறைந்தால்
              என் கருத்தினிலே யாரிருப்பார்?
கூனும் குருடும் இன்றி பிறந்துவிட்டால்
              மானுடரெல்லாம் மானுடரோ!
ஆணும் பெண்ணும் அலியென வரும்
              அவதாரமெல்லாம் அவதாரமோ!
பேணும் இவ்வுயிரெல்லாம் வாழ்வதற்கு
              பெருங்கருணை நீ புரியாயோ!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment