Tuesday 26 February 2013

திருத்தளி உவந்த வேளே!

கிளிநொச்சி கந்தவேள் வணக்கப் பாமலர்
                                                  - இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன்















அருணகிரி தருதமிழ் தேனினில் மனமுருகி
           அடிமையை மறக்கலாமோ
ஔவைக்கு நாவலின் கனியுதவு சூட்டிலே
          அன்புநைந் துருகலுண்டோ
கருணையுள முருகனே அழகனே கந்தனே
           கலியுகக் கடவுளென்றும்
காங்கேயனே குகா வள்ளிகுஞ் சரிபாகா
            கார்த்திகை மைந்தனென்றும்
தருணமிகு சண்முகா சற்குரு சடாட்சரா
            தழலுருவ மானவேலா
தக்கோர் மனக்குகையில் மிக்கஒளி வீசியே
            தலைமுறைவிளங்க அருள்வாய்
திரணமென வருதீங்கு தீருநின் சேவடி
          சேவித்து வாழ்பவர்க்கே
செல்வர்மலி கிளிநொச்சி நன்னகர் மேவிவளர்
          திருத்தளி உவந்தவேளே!

No comments:

Post a Comment