Sunday 3 February 2013

சேவடி தாராய் இன்றே!


மஞ்சள்முகமும் மலர்விழி பொழி
           மாகருணையும் கண்டே
தஞ்சமென வந்தேன் நின் 
           தாளே! தயைபுரி என்றே
கெஞ்சுகின்றேன் ஐயா! நீ
           கேட்டிலையா! நன்றே
செஞ்சொற்தமிழ் தந்தாய் உன்
           சேவடி தாராய் இன்றே!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment