Saturday 23 February 2013

உண்டு களித்திடும் செழிப்பு!



கள்ளம் கபடம் இல்லா
வெள்ள மனச் சிரிப்பு!
உள்ளக் களிப்ப தனை
மெல்லக் காட்டும் இரு
கண்ணில் மிளிரும் ஒளிர்ப்பு!
மண்ணும் கல்லும் புல்லும்
மற்றுள யாவும் சேர்ந்து
பின்னிப் பிணைந்து வாழ
மானுடர் மட்டும் மாறியே
மமதையில் அழிகிறா ரென
எண்ணி நகைக்கும் நகைப்பு!
பண்டைய தமிழ்ப் பண்போடு
வெண் பொங்கல் பாலுடன்
உண்டு களித்திடும் செழிப்பு!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment