Tuesday 8 January 2013

தனி நாடு காண்பான்
































யாதும் ஊரே
யாவரும் கேளிர் எனும்
உயர் தனிக் கொள்கையுடன்  
வாழ்ந்தான் தமிழன்,

யாதும் ஊராய்
யாவரும் கேளிராய் இன்றும்
உலகெலாம் பரந்து
தமிழன் வாழ்கிறான் எனினும்,

தீதும் நன்றும்
பிறர்தர வாரா என்பதும்
அறிந்தவன் தமிழன் ஆதலால்
தீதைத் தீய்த்து நன்றை வளர்க்கும் அன்றே,

தன்னிகரில்லா ஈழத் திருநாட்டில் 
தமிழ்வாழ நாடு காண்பான் தமிழன், 
தனி நாடு காண்பான்
தரணியோர் வியக்க நன்றே!
                              - சிட்டு எழுதும் சீட்டு 46

No comments:

Post a Comment