Saturday 26 January 2013

அடிசில் 43


கரட் அல்வா       
                              - நீரா -

















தேவையான பொருட்கள்:
கரட் துருவல்  -  200 கிராம்
சீனி  -  ½ கப்
பால்  -  ½ கப்
சிறிதாக ஒடித்த முந்திரிப்பருப்பு  -  ¼ கப்
நெய்  -  1 மேசைக்கரண்டி
ஏலப்பொடி  -  1சிட்டிகை
உப்பு  -  ½ சிட்டிகை

 செய்முறை:
1.  பாலை நன்கு சூடாக்கிக் கொள்க.
2.  அரைவாசி நெய்யைச் சூடாக்கி அதில் முந்திரிப்பருப்பை பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
3.  அந்த நெய்யினுள் துருவிய கரட்டைப் போட்டு ஈரத்தன்மை நீங்கும்வரை வறுக்கவும்.
4.  அதனுள் சூடாக்கிய பாலைச் சேர்த்து பால் வற்றும் வரை கிளறவும். 
5.  பால் வற்றியதும் சீனி, நெய், முந்திரிப்பருப்பு போட்டுக் கிளறி, யாவும் ஒன்றாக கரண்டியுடன் சேர்ந்து வரும் போது உப்பும், ஏலப்பொடியும் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

No comments:

Post a Comment