Friday 11 January 2013

தீய்க்கத் திருவுளமோ!

பாரோர் பரவும் பரனே! பதியிலேன்

          படுதுயரம் பாராயோ! பகலிரவாய்
வாராயோ! வாராயோ! என்றரற்றி
          வணங்கா திருப்பேனை வாவென்று
தாராயோ! உன் தளிர்க்கரந் தான்
          தயாநிதியே! தரியேன்! பிரியேன்!
தீரா வெம்பிணித் தீயில் தீய்க்கத்
          திருவுளமோ! ஈதென்ன மாயமோ!  

No comments:

Post a Comment