Thursday 17 January 2013

இணைந்து வாழ்க!














பூனையும் கிளியும் என்றும்
பூசலிட்டு பிணங்கி வாழும்.
பூசலும் பிணக்கமும் கண்டு,
பூனையைக் கண்ட கிளிபோல
பயந்து நடுங்கல் அழகா!
பரிவுடன் பகர்ந்தார் பெரியோர்.
பரிவும் பாசமும் இணைய
பழகும் பண்பு மாறும்.
பூனையும் கிளியும் ஒன்றாய்
பிணைந்து வாழ்தல் கண்டு
பூனையைக் கண்ட கிளியாய்
இணைந்து வாழ்க நன்றாய்!           
                                 - சிட்டு எழுதும் சீட்டு 47

No comments:

Post a Comment