Sunday 5 August 2012

வீற்றிருந்தும் அருள்வான்



உள்ளமெனும் பொய்கையிலே நீராட வருவான் 
        ஓங்குபுகழ் சந்தமெல்லாம் ஓர்கணத்தில் தருவான்
கள்ளமில்லா நெஞ்சினிலே கரந்துறைய வருவான்
        கீதத்தமிழ் பாவினிசை கருத்தினில் அருள்வான்  
வெள்ளமனத் தாமரையில் விரைந்திருக்க வருவான்
        வேண்டுபுகழ் வகையெலாம் வேண்டிட அருள்வான் 
வள்ளல்லவன் சிந்தையிலே நிறைந்திருக்க வருவான்
       வீங்குபுகழ் வயலூரில் வீற்றிருந்தும் அருள்வான்
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment