Thursday 30 August 2012

தாயே மீனாட்சி!


தாயே மீனாட்சி! தரணியெங்கும் பாழாச்சி!
மாயே நீயானால் மாற்றிடுவாய் எமதாட்சி!
பாயே படுக்காத பாவியார் உளராச்சி!
நோயே இலாது நோன்பிருப்பார் யாராச்சி!
வாயே திறந்து வரம்தரவே வாஆச்சி!
காயே ஆனாலும் கனியாய் தாஆச்சி!
தீயே நீயானால் தீண்டுவார் யாராச்சி! 
நீயே ஆதாரம் நிம்மதியை தாஆச்சி!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment