Thursday 16 August 2012

உண்மை

நிந்தனை பெரிதென்றாகில்
          நினைவிழந்து போவது உண்மை
வந்தனை பெரிதன்றாகில்
          வாய்மை வளர்வது உண்மை
சிந்தனை பெரிதென்றாகில்
          சிவமதில் கலப்பது உண்மை
கந்தனைக் காண்பது உண்மை
          கருணையில் திளைப்பது உண்மை
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment