Monday 6 August 2012

அடிசில் 32

கோதுமை அல்வா

                                             - நீரா -


























தேவையான பொருட்கள்:
கோதுமை மா  -  1½ கப் 
சீனி  -   ¾ கப்
நெய்  - ½ கப்
முந்திரிப்பருப்பு  -  6
ஏலக்காய் தூள்  - ½ தேக்கரண்டி

செய்முறை:
1.  முந்திரிப்பருப்பை சிறிதாக வெட்டிக்கொள்க.
2.  வாயகன்ற பாத்திரத்தில் அரைவாசி நெய்யை விட்டு சூடாக்கி அதில் வெட்டிய முந்திரிப்பருப்பை பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
3.  அப்பாத்திரத்தில் கோதுமை மாவைச் சேர்த்து இளஞ்சூட்டில் பொன்னிறமாக வறுத்துக் கொள்க.
4.  இன்னொரு பாத்திரத்தில் ¾ கப்  தண்ணீரில் சீனியைச் சேர்த்து சீனிகரைந்து குமிழிகள் தோன்றி, சீனிப்பாணி விரலில் ஒட்டும்வரை சூடாக்கவும். 
5.  வறுத்த மா உள்ள பாத்திரத்துள் இச்சீனிக்கரைசலைச் சேர்த்து இளஞ்சூட்டில் கட்டிபடாமல் கிளறவும்.
6.  கலவை ஒன்றாகச் சேர்ந்தது வரும் போது மிகுதி நெய்யைவிட்டு கிண்டி, முந்திரிப்பருப்பு,
ஏலக்காய் தூள் சேர்த்து நெய் பிரிந்து வரும் போது இறக்கவும். 
7.  நெய் பூசிய தட்டில் கொட்டி ஆறியதும் விரும்பியவடிவில் வெட்டிக் கொள்க.

No comments:

Post a Comment