Friday 17 August 2012

அடிசில் 33


வறுத்த பூசணிவிதைகள்
                                                       - நீரா -




















தேவையான பொருட்கள்:
பூசணிவிதைகள்  -  2 கப்
நல்லெண்ணெய்  -  2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்  -  1 தேக்கரண்டி
உப்பு  -  1 சிட்டிகை

செய்முறை:
1.  பூசணிக்காயில் இருந்து விதைகளை நீக்கி கழுவிக்கொள்க.
2.  அவற்றை ஈரம் இல்லாது நன்கு காயவைத்து வைத்துக்கொள்ளவும்.
3.  நல்லெண்ணெய், மிளகாய்தூள், உப்பு மூன்றையும் ஒன்றாகக் கலந்து கொள்க.
4.  இதனுள் பூசணிவிதைகளை இட்டு எல்லா விதைகளிலும் கலவை படும்படி பிசிரிக் கொள்க.
5.  அதனை ஒவனில் சூடாக்கக் கூடிய பாத்திரத்தில் பரவிப் போட்டு, 140°C ல் சூடாகிய ஒவனில் 12 நிமிட நேரம் வைத்து எடுக்கவும்.
6.  மொறு மொறெனச் சாப்பிட விரும்புவோர் பூசணிவிதைகள் வெடிக்கத் தொடங்கும் போது எடுக்கவும்.  

No comments:

Post a Comment