Friday 13 April 2012

கருவென இருந்தவன்

   


மானினம் பாய மயிலினம் ஆடும்
          மலர்ச் சோலையில் மருவியே நின்று
கானினிடை முனிவர் காட்சியில் கலந்து
          காவியம் படைத்திட கருவென இருந்தவன்
மானுடமெனும் தோற்றத்தைப் போக்க
          மனத்திடை இவர்ந்து மகிழ்ச்சியைச் சுரந்து
தேனிடை உள்ள சுவையென ஊறி
          தானென தென்னும் தன்மையைத் தந்தான்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment