Thursday 5 April 2012

பாலமுதம்



























மேனிவனப்புக் கெடுமென்று 
மேலை நாட்டார் சொன்னார் என்ற 
பசப்பலுக்கு மயங்கி தம் குழந்தைக்கு
பாலமுது கொடுக்க மறுக்கும் 
தாய்மார் பலர் வாழும் இந்த
விந்தை உலகில் குரங்காய் இருந்தும்
அன்பாய் அரவணைத்து மடியிருத்தி
உன்குட்டி பாலமுது குடித்து உறங்க
காத்திருக்கும் தாயே! நீ வாழி!
                                           சிட்டு எழுதும் சீட்டு - 27

No comments:

Post a Comment