Thursday 6 February 2014

துடிப்பது பாரீர்!














வாயது கட்டி 
          வறுமையைக் காத்து
வேயென தோள்கள்
          வளைந்திட்ட போதும் 
நோயது கண்டு
          நுடங்கிடா மேனி
பாயது தன்னில்
          படுத்திட அறியா
ஓய்வின்று உழைத்து
          உணவது சமைத்து
சேயவன் தனக்கு
          சோறது ஊட்ட
காய்கறி இன்றி
          கலங்கிய மனதுடன்
தாயவள் துடிக்கும்
          துடிப்பது பாரீர்!
                                - சிட்டு எழுதும் சீட்டு 84

No comments:

Post a Comment